முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அணை: கேரள சட்டசபை தீர்மானம்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.30 - புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் ஒத்துழைக்காவிட்டால் கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் தெரிவித்தார். டெல்லிக்கு வந்துள்ள அமைச்சர் பி.ஜே. ஜோசப், வருவாய்த் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பன்குமார் பன்சால், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும் என்று கேரள அரசின் வாக்குறுதி பிரமாண பத்திரமாக பிரதமரிடம் வழங்கப்படும். அதற்கு பிறகும் மத்திய அரசும், தமிழக அரசும் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கேரள சட்டசபையில் புதிய அணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்