முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி 3-ம் தேதிசென்னை திரும்புகிறார்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

சென்னை, நவ.30 - தி.மு.க. எம்.பி. கனிமொழி வரும் 3 ம் தேதி சென்னை திரும்புகிறார் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. தி.மு.க தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் எப்போது சென்னை வருகிறார் என்று பலரும் தலைமை கழகத்திற்கு தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர் நேற்று திகார் சிறையில் இருந்து விடுதலையானார். எனினும் அவர் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நாட்களில் இருக்க வேண்டியதுள்ளது. இதனால் நாளை, நாளை மறுநாள் டெல்லியில் இருந்து விட்டு வரும் 3 ம் தேதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். டிசம்பர் மாதத்தில் நீதிமன்றத்துக்கு விடுமுறையான நாட்களில் சென்னையில் கனிமொழி இருப்பார். இவ்வாறு தி.மு.க. தலைமை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்