எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.30 - நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் தனியார்களிடமிருந்து அரசால் கையகப்படுத்தப்பட்ட 11 ஆயிரத்து 204 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் தனியாரிடமிருந்த பல்லாயிரக்கணக்கான வன நிலங்களை அரசால் கையகப்படுத்தி அதனை பராமரிக்க வனத்துறையிடம் நேற்று வழங்கினார்கள். மேலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முறையை கண்காணிக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பட்டாபிராம் கிராமத்தில் புதிய வட்டாட்ச்சியர் அலுவலகத்தை காணொலிக் காட்சி (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி) மூலமாக திறந்துவைத்தும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், ஒரு கணினி, ஒரு அச்சுப்பொறி, ஒரு நகலி இயந்திரம் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் தனியாரிடமிருந்த 11,204 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, வன நிலமாக அறிவிக்கப்பட்டு, அந்நிலங்களை பராமரிக்க, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) வனத்துறையினரிடம் வழங்கினார்கள்.
பல ஆண்டுகாலமாக தனியாரிடமிருந்த இந்த செழிப்பான வனப்பகுதியை அரசு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றத்தால் 9.9.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், சுமார் ஒரு வருட காலமாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 2011 ஜுன் மாதம் முதல் வன நிலங்களின் பரப்பளவு அரசால் கண்டறியப்பட்டு 11.08.2011 அன்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கை செய்யப்பட்டு அதன்பின் இந்த நிலங்கள் சட்டப்படி அரசால் கையகப்படுத்தப்பட்டு, வனத்துறைக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் நேற்று வழங்கப்பட்டது.
தனியார் நிலங்கள் அரசுடைமை ஆக்கப்படுவதுடன் வனவளங்களை பெருக்கும் நடவடிக்கையாக இந்த அரிய சம்பவம் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் சுமார் 10,000 மனுக்கள் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அடையாள அட்டைகள், குடிதண்ணீர் வசதி, முதியோர் உதவித் தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிக அளவிலான மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்களின் இதுபோன்ற கோரிக்கை மனுக்களை விரைவாகவும், செம்மையாகவும், மாவட்ட ஆட்சியர்கள் நிறைவேற்றிடும் பணிகளை கண்காணிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்படி ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் கொடுக்கும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச் சீட்டும் மனுதாரருக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு மனுவுக்கும் ஒரு தனி அடையாள எண்ணும் வழங்கப்படும். மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டு அதன்மீது எடுக்கப்படும் முடிவினை கண்காணிக்கும் வகையில் காலவரையரையும் நிர்ணயிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் மூலம் மனுவின் மீது எடுக்கப்பட்ட தனது முடிவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவித்து, துணை ஆட்சியர்களால் அவற்றின் மீது எடுக்கப்பட்ட முடிவு சரிபார்க்கப்பட்டு உரிய மனுதாரருக்கு பதில் அனுப்பிவைக்கப்படும். முடிவு திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு மீண்டும் மனு மறு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சரிபார்க்கப்படும். இந்த புதிய திட்டத்தினால் மாவட்டந்தோறும் நிலுவையில்
உள்ள மனுக்களின் எண்ணிக்கையினை கண்காணிப்பதுடன், கொடுக்கப்பட்ட அடையாள எண்ணைக் கொண்டு நிலுவையில் உள்ள எந்த ஒரு மனுக்களின் விவரங்களையும் மாநில அளவிலும் அரசால் கண்காணிக்கப்படும். இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்தப் புதிய திட்டத்தினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிராமத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திருத்தணி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை காணொலிக்காட்சி (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி) மூலமாக திறந்து வைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்திலுள்ள பட்டாபிராமபுரம் கிராமத்தில் 2.97 ஏக்கர் நிலப்பரப்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடம் தரைத்தளம் 417.53 சதுர மீட்டரிலும், முதல் தளம் 401.74 சதுர மீட்டரிலும், இரண்டாம் தளம் 424.86 சதுர மீட்டரிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டடத்தில் பதிவறைகள், கணினி அறை, வரவேற்பறை, கூட்டரங்கம், வட்ட வழங்கல் அலுவலருக்கான அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலருக்கன அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்ட்டுள்ள இந்த புதிய கட்டடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29,11,2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களை நவீனப்படுத்தவதற்காக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தலா ஒரு கணினி (இச்ஙிஙீசீசிடீஙு), ஒரு அச்சுப்பொறி (டஙுடுடூசிடீஙு) மற்றும் ஒரு ஒளி நகலி (கஹஙூடீஙு ஙசீங்சிடுக்சீடூஷசிடுச்டூ டஙுடுடூசிடீஙு ) இயந்திரம் வட்டாட்சியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள 220 வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு கணினி, அச்சுப்பொறி மற்றும் ஒளி நகலி வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு 1 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இந்நிகழ்வுகளின்போது வருவாய் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் துறையின் அரசு முதன்மைச் செயலாளர், வனத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.