எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.30 - நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 பயிலும், 6.19 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.178 கோடி மதிப்புள்ள சைக்கிள்களை தமிழக முதல்வவ் ஜெயலலிதா நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இணையதளம் ஒன்றினையும், வன்னிய பொது நலச் சொத்து நல வாரிய இணையதளத்தையும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாநேற்று (29.11.2011) தலைமைச் செயலகத்தில், நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, 7 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து 7 உலமாக்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கினார்கள்.
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில் 178 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 2,76,776 மாணவர்களுக்கும், 3,42,151 மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 6,18,927 மிதிவண்டிகள் வழங்கப்படும். இதேபோன்று, உலமாக்களுக்கும், பள்ளி வாசல்களில் பணிபுரியும் இமாம்கள் மற்றும் மோதினார்கள், தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்கள் மற்றும் மதரஸாவில் பணிபுரியும் அரபி ஆசிரியர்கள் என 11,457 நபர்களுக்கு 3 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 632 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்து, 7 மாணவ மாணவியர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மிதிவண்டிகள் வழங்கி வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து 7 உலமாக்களுக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மிதிவண்டிகளை வழங்கினார்கள்.
மைய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இடஒதுக்கீட்டின் பயனைப் பெறுவதற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெறுவதில் சிரமங்கள் உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனைக் களையும் பொருட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் / எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து இணையதளம் மூலம் தெரிவித்து உடனடியாக நிவாரணம் பெற ஏதுவாக மென்பொருள் உருவாக்கப்படும் என்று 23.08.2011 அன்று
நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் விரைந்து பெற்றிட ஏதுவாக தேசிய தகவல் தொடர்பு மைய உதவியுடன் ஒரு புதிய இணையதள (கீசிசிஙீ://சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ/ஸஷஙிஸஷஙிசூ/ கிஙுடுடீசுஹடூஷடீஙூ.கீசிஙிங்) உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய இணைய தளத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்கள். இந்த இணைய தளம் மத்திய அரசுப் பணிகள் கல்வி உதவித் தொகை பெறுபவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலரிடமிருந்து விரைந்து பெறுவதற்கு பயன்படும்.
வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, உயிலாக எழுதி வைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு, அவைகளை ஒருங்கிணைத்து அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின் பலன் முழுவதும் உரியவர்களுக்குச் செல்வதற்கான
வழிவகைகளைக் காணும் பொருட்டு வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்திற்கான இணைய தளம் ஒன்றும் தேசிய தகவல் தொடர்பு மையத்தால் ( கீசிசிஙீ://சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ/சிடீஙூசிசுஙீஙீசூஸ1
கீேசிசிஙீ://சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ/சிடீஙூசிசுஙீஙீசூஸ2 ) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மூலம் வன்னியர் அறக்கட்டளைகளுடைய சொத்து விவரங்கள், செயல்பாடுகள் மற்றும் வருமானம் ஆகியவை வன்னியர் பொது சொத்து நலவாரியத்திற்கு தெரிவிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும். இந்த புதிய இணைய தளத்தை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமை அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச்
செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.