முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் கூட்டத்தில் இன்று அமைச்சர்கள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சங்கரன்கோவில்.டிச.1. சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள வைஷ்ணவி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழக நிதி அமைச்சரும் கழக பொருளாளருமான பன்னீர் செல்வம், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்ரும் தலைமை நிலைய செயலாளருமான செங்கோட்டையன், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சரும் நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா செந்துார் பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ்பாண்டியன் எம்.பி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வாசு தேவநல்லுர்ர் சட்ட மன்ற உறுப்பினர் துரையப்பா, அம்பை சட்ட மன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர், கிளை கழகத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். அமைச்சர்களின் இந்த வருகையால் இடைத்தேர்தலில் அதிமுக அனைவரையும் முந்திக்கொண்டு வேலையை ஆரம்பித்து விட்டது. தொண்டர்களும் உற்சாகமாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்