முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷம்சி விமான தளத்தை காலி செய்ய கெடு நீட்டிக்க மறுப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச.1 - ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலுள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை ட்ரோன் ஏவுகணைகளைக் கொண்டு தாக்க பயன்படுத்தி வரும் ஷம்சி விமானதளத்தை காலி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு கொடுத்துள்ள 15 நாள் கெடுவை நீட்டிக்க அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மறுத்துள்ளார். சமீபத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து பாகிஸ்தான் அரசும் கடும் கோபத்தில் உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஷம்சி விமானதளத்தை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்த விமான தளத்தைத் தான் தனது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக அமெரிக்க படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயீத் அல் நஹ்யான் திடீரென்று நேற்று பாகிஸ்தான் வந்தார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் சர்தார் மற்றும் ராணுவத்தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது  அவர் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷம்சி விமானதளத்தை காலி செய்ய அமெரிக்காவுக்கு அளித்துள்ள 15 நாள் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சர்தாரி மறுத்துவிட்டார். 

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் ஷம்சி விமானதளத்தை காஇ செய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை. பாகிஸ்தான் அரசு கடந்த 1992ம் ஆண்டு ஷம்சி விமானதளத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் பரம்பரையினருக்கு லீசுக்குவிட்டது. அந்த தளத்தை பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதியளித்து. இந்த சந்திப்பின் போது நஹ்யான் கெடுவை நீட்டிக்க மீண்டும் சர்தாரியை வலியுறுத்தியும் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்