முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விமானத்தில் திடீர் கோளாறு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, டிச.1 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் புறப்பட்டு செல்லவிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் காலதாமதமாக புனே நகருக்கு புறப்பட்டுச் சென்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கு சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கொல்கத்தா சென்றார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அவர் மகாராஷ்ட்ர மாநிலம் புனேவுக்கு புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருந்தார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவர் புறப்பட்டுச் செல்ல இருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான போயிங் 737 விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பிறகு சிறிது நேர தாமதத்திற்கு பிறகு மீண்டும் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்ட அந்த விமானத்தில் ஏறி ஜனாதிபதி புனே புறப்பட்டு சென்றார். அவரை விமான நிலையத்தில் மேற்குவங்க கவர்னர் என்.கே.நாராயணன், 2 மாநில அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்