எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச.1 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்றும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் லோக்சபை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், சபாநாயகர் மீராகுமார் வழக்கமான பணிகளை துவக்குவதன் அடையாளமாக கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உடனடியாக எழுந்து சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சில காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் தங்கள் கைகளில் இருந்த பதாகைகளை அசைத்தபடி தனி தெலுங்கானா மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் தங்கள் கைகளில் பதாகைகளுடன் எழுந்து சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். தெலுங்குதேசம், இடது கம்யூனிஸ்ட், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதியை நோக்கி விரைந்தனர்.
இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. எம்.பி.க்களை அமைதிப்படுத்தி அவர்களை அவரவர் இருக்கைகளில் அமரச்செய்ய சபாநாயகர் மீராகுமார் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோள்கள் பலிக்கவில்லை. எம்.பி.க்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் சபை நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் சபையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.
பிறகு சபை மீண்டும் கூடியபோதும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கூட்டணி எம்.பி.க்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக கூச்சல் போட்டனர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழாத அளவுக்கு பேரிரைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சபையை தொடர்ந்து நடத்த முடியாததால் லோக்சபையை நேற்று நாள் முழுவதுமாக சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.
இதேபோல ராஜ்யசபையிலும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி பா.ஜ.க., பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று கோரி இவர்கள் கோஷம் எழுப்பினார்கள். சிலர் சபையின் மையப் பகுதிக்கே சென்று கோஷமிட்டனர். இதனால் கேள்வி நேரத்தை நடத்த முடியவில்லை. இதையடுத்து அமளிக்கு இடையே சபையை நண்பகல் 12 மணிவரை சபைத் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.
பிறகு சபை மீண்டும் கூடியது. ஆனாலும் கூட எதிர்க்கட்சிகளின் அமளி ஓயவில்லை. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் இட்டனர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசும் கோஷங்களை எழுப்பின. இதையடுத்து ராஜ்யசபையை நேற்று நாள் முழுவதுமாக சபைத் தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளி, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தொடர்ந்து 4-வது நாளாக முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.