முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் இ.அ.செ. குடும்பத்தார் மறைவிற்கு இரங்கல்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.1 - ஓசூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பாஸ்கரன் மனைவி, மாமனார் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளரும், ஓசூர் நகரமன்ற துணைத் தலைவருமான பி.பாஸ்கரன் தனது குடும்பத்தினருடன் உறவினருடைய திருமணத்திற்கு சென்று வாகனம் மூலம் வீடு திரும்பும்போது, கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பாஸ்கரன், அவருடைய மனைவி ஜலஜா மற்றும் அவருடைய மாமனார் மாரியப்பன் ஆகிய மூவரும் அகால மரமணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்துயரம் அடைந்தேன்.

என் உயிரினும் மேலான எனதருமை கட்சியின் உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று நான் அடிக்கடி வலியுறுத்தி வந்தபோதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத விபத்துகள் நடைபெற்று, ரிலை மதிக்க முடியாத எனதருமை கட்சியின் உடன்பிறப்புகள் உயிரிழப்பது மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

எனவே, கட்சியின் உடன்பிறப்புகள் இனிவரும் காலங்களில் எனது அன்பு வேண்டுகோளை ஏற்று, மிகுந்த கவனத்துடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

விபத்தில் அகால மரணமடைந்த பாஸ்கரன், ஜலஜா, மாரியப்பன் ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்