எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.2 - தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் மூலம் விலைக்கு வாங்கி அபகரித்து கொண்டதாக மு.க.ஸ்டாலின் அவரது உதவியாளர் ராஜா சங்கர், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுபற்றி விபரம் வருமாறு:-
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரீஸ் சாலையில் வசித்து வருபவர் என்.எஸ்.குமார் (எ) சேஷாத்திரிகுமார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தான் பாதிக்கப்பட்டது பற்றி புகார் அளித்து இருந்தார். புகாரை ஏற்க மறுத்ததால் தற்போது நேற்று முன்தினம் மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அந்த புகாரில் அவர் தெரிவிதிருப்பதாவது:-
நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது தந்தையார் காலஞ்சென்ற நாராயணசாமியால் வாங்கப்பட்டு விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று எனது தந்தையால் பெயர் சூட்டப்பட்ட இடத்தில், எனது குடும்பத்தினருக்காக வாங்கப்பட்ட இடத்தில் எனது பங்கிற்காக கிடைத்த 2 1/2 கிரவுண்டு இடத்தில் நான் 4445 சதுர அடி கட்டிடம் கட்டி வசித்து வந்தேன். பின்னர் இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக இந்த 6 கிரவுண்டு நிலத்தை மு.க.ஸ்டாலின் ஐசிஐசி வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர் அங்கு வந்ததிலிருந்து அருகேயுள்ள எனது வீட்டையும் வாங்கி ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக அங்கு குடியிருந்தவரை மிரட்டி வீட்டை காலிசெய்ய வைத்தனர். அதன்பிறகு தேவி பழனிச்சாமி என்பவருக்கு மாதம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்திருந்தேன். மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் அவரையும் கட்டாயப்படுத்தி வீட்டை காலிசெய்ய வைத்து விட்டார்கள். அத்துடன் சுப்பா ரெட்டி (சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரி ஹோட்டல் அதிபர்), ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து எனது சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள். இல்லையென்றால் எனக்கு பல பிரச்சினைகள் வரும் என்று மிரட்டினார்கள்.
அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்துபோய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 16.7.2010 அன்று புகார் செய்ய சென்றேன். எனது மனுவை வாங்க மறுத்துவிட்டார்கள். அதன்பிறகு பத்திரப் பதிவாளரை எனது வீட்டிற்கு அழைத்து வந்து பி.வேணுகோபால் ரெட்டி பெயரில் எனது வீட்டை கிரயம் செய்து கொண்டார்கள். 5 1/2 கோடி (5,54,50,000) ரூபாய் டி.டி. ஆக கொடுத்தார்கள். அதன்பிறகு சீனிவாசன் எனது வீட்டிற்கு வந்து ரூபாய் 1 கோடியே 15 லட்சம் பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்று இதைபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமானவரி துறையினர் மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதோடு ரூ.15 லட்சத்தை கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். தற்போது இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு மு.க.ஸ்டாலினின் மகள் சொந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே என் வீட்டினை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன் கருப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிசோதனை செய்ய வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என் வீட்டை வீட்டு தருமாறும் எனக்கும், என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சேஷாத்திரி குமார் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஏற்கனவே நில அபகரிப்பு புகாரில் தி.மு.க. முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சிக்கி சிறையில் உள்ள நிலையில் அந்த கட்சியின் பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் மற்றும் அவரது உதவியாளர் மற்றும் குடும்பத்தாரே அதிகார துஷ்பிரயோகம் செய்து வீட்டை அபகரித்ததாக கமிஷனரிடம் வீட்டு உரிமையாளர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் சென்றுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் உதவியாளர் ராஜா சங்கர், வேணுகோபால் ரெட்டி, சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. அவர்கள் மீது பிரிவு 451, 386, 387, 506 (2), 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.