முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசினர் மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் அமைச்சர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.2 - அரசினர் மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி இராமஜெயம் ஆய்வு செய்தார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூகநலத் துறை அமைச்சர், செல்வி இராமஜெயம், நேற்று 30.11.2011 (புதன்கிழமை) காலை 11.00 மணி அளவில் சமூகபாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை சாந்தோமில் செயல்படும் அரசினர் மகளிர் பாதுகாப்பு இல்லத்தை திடீரென ஆய்வு மேற்கொண்டார். இவ்வில்லத்தில் மொத்தம் 80 பேர் பாலியில் தொழில் ஈடுபட்டு நீதி மன்ற வழக்கை சந்திக்கும் பெண்கள் தங்கி உள்ளனர். இவ்வில்லத்தில் தங்கியுள்ள பெண்கள் தங்களின் குறைகளை  அமைச்சரிடம் தெரிவித்தார். இவ்வில்லத்தில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் தங்கியுள்ளனர். அவர்கள் பாலியில் தொழிலிருந்து விடுப்பட்டு குடும்ப வாழ்க்கை வாழ்வதற்கு ஆவன செய்யுமாறு அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளனர்.  அமைச்சர்  உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

மேலும், அப்பெண்கள் சுயதொழிலில் ஈடுபட அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்குமாறு  அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்பேரில், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இவ்வில்லத்தில் தங்கியுள்ள பெண்கள் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள  அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்