முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க. முடிவு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.2 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவர பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.  சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்த பிரச்சனை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று 5-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று காலை கூடுவதற்கு முன்பாக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், துணைத் தலைவர் கோபிநாத் முன்டே, ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி, துணைத் தலைவர் அலுவாலியா, கட்சியின் முன்னாள் தலைவர்கள் ராஜ்நாத்சிங், முரளிமனோகர் ஜோஷி, லோக்சபை பா.ஜ.க. கொறடா ரமேஷ் பைஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு அத்வானியும், சுஷ்மா சுவராஜும்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.  அப்போது அவர்கள்  கூறுகையில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்து பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை அரசு சந்திக்க வேண்டும். அல்லது அந்த முடிவை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கூறினர். அரசு தனது முடிவை வாபஸ் பெறுவதற்கான அடையாளம் எதுவும் தென்படவில்லை. எனவே பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவருவதென பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கொண்டுவருவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த தங்களை அரசு சார்பில் யாரும் அணுகவில்லை. எனவே தங்கள் போக்கிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். இந்த கூட்டத்திற்கு பிறகு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவை பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசினர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும். மேலும் விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறினார். எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கையுமே மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த விருப்பமில்லை என்பதே தெளிவாகிறது என்றும் ஷாநவாஸ் உசேன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago