முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் ஒரு அப்பாவி: கனிமொழி சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.4 - நான் ஒரு அப்பாவி என்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து சட்டப்படி நான் விடுதலையாகுவேன் என்றும் கனிமொழி கூறியுள்ளார். ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2 ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி,ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். விடுதலையாகிய பின்னர் அவர் டெல்லியில் முதன் முதலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஒரு அப்பாவி என்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து நான் சட்டப்படி வெளியே வருவேன் என்று கூறியுள்ளார். டெல்லி ஐகோர்ட்டு என்னை ஜாமீனில் விடுதலை செய்திருப்பதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மீண்டும் சென்னைக்கு திரும்புவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வழக்கில் கைதாகி விடுதலையாகி உள்ள நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது முதல் நடவடிக்கையாகும் என்று டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்படுவதற்கு முன்பு கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். உடனே அடுத்த நடவடிக்கை என்ன என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கனிமொழி, நான் அப்பாவி என்பதை நிரூபிப்பதுதான். வழக்கை சட்டப்படி சந்தித்து அதிலிருந்து விடுதலையாகுவேன் என்றும் கனிமொழி கூறினார். இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடந்த மே மாதம் 20-ம் தேதி கைதான கனிமொழி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த செவ்வாய்கிழமை ஜாமீனில் விடுதலையான கனிமொழி, 3 நாட்களாக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு நேற்று சென்னை திரும்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்