எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, டிச.4 - சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு பிரச்சினையால் மத்திய அரசை கவிழ்க்க மாட்டோம். அந்த எண்ணம் எங்களுக்கு இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, உ.பி. முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த பெண் முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் பிரச்சினையில் மறு பரிசீலனை செய்யுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார். தொலைபேசி மூலம் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், மம்தாவின் தாயார் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மம்தாவின் தாயார் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தெரிந்ததே. தொலைபேசியில் அவரது நலம் விசாரித்த பிரதமர் மன்மோகன்சிங், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு பிரச்சினை குறித்தும் மம்தாவிடம் பேசினார்.
இந்நிலையில் கூக்ளியில் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவல்ல. இது எனது கட்சியின் முடிவு. இருந்தாலும் பிரதமர் எனக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதால் இந்த பிரச்சினை குறித்து எங்கள் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். இருந்தாலும் எங்கள் நிலையை மறுபரிசீலனை செய்வதற்கு சொற்ப அளவிலான வாய்ப்புதான் உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கவிழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசின் இந்த முடிவை எங்களால் ஆதரிக்க முடியாது. காரணம், தேர்தல் நேரத்தில் வர்த்தகர்களுக்கும், விவசாயிகளுக்கும் நான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அவர்களை பாதுகாப்பதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அந்த உறுதியில் இருந்து என்னால் பின்வாங்க முடியாது. விவசாயிகள், வர்த்தகர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசின் அன்னிய முதலீட்டு முடிவை அனுமதித்தால் இவர்களது நலன் பாதிக்கப்படும். எனவே அரசின் முடிவை ஆதரிக்க முடியாது. அது சிறிதும் சாத்தியமல்ல. இருந்தாலும் கூட கட்சியினருடன் இது குறித்து ஆலோசித்து ஒரு முடிவை தெரிவிக்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 9 நாளாக அமளி நீடித்து வருகிறது. மீண்டும் பாராளுமன்றம் வரும் புதன் கிழமையன்றுதான் கூடும். அன்றும் இதே பிரச்சினை எதிரொலித்தாலும் ஆச்சரியமில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் அரசின் பலம் 273 ஆக உள்ளது. மெஜாரிட்டியை நிரூபிக்க 272 உறுப்பினர்கள் தேவை. ஆனால் அரசுக்கு அதை விட ஒரு எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. இவர்களது ஆதரவு இல்லாவிட்டால் அரசு கவிழக் கூடும். ஆனால் அன்னிய முதலீட்டு பிரச்சினையில் திரிணாமுல் காங்கிரசும், தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஒருவேளை எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் இவர்கள் அதை ஆதரிப்பார்களா? என்பதுதான் இன்றைய கேள்வி. ஆனால் அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று மம்தா பானர்ஜி கூறி விட்டதால் மன்மோகன்சிங் அரசு தப்பிக்கவே வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.