முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க உரிமத்தை நான் வழங்கவில்லை - எஸ்.எம். கிருஷ்ணா

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 6 - தாம் முதல்வராக இருந்த போது கர்நாடகத்தில் வனப்பகுதிகளில் சுரங்க உரிமம் வழங்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கிருஷ்ணா முதல்வராக இருந்த போது சுரங்க உரிமம் அனுமதி வழங்கியதோடு வனப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அந்தஸ்தையும் தளர்த்தினார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் நான் எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கவில்லை. அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின்பு அரசு இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின்பே சுரங்க உரிமம் வழங்கப்பட்டது. இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. யாருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை காட்டப்படவில்லை. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். கர்நாடக லோக் அயுக்தா நீதிபதி கர்நாடக முன்னாள் முதல்வர்கள் கிருஷ்ணா, குமாரசாமி, தரம்சிங் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி ஜனவரி 6 ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்