எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், டிச.- 6 - ஆந்திர சட்டசபையில் நேற்று முதல்வர் கிரண் குமார் ரெட்டியுடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். இதை அடுத்து இந்த ஒரு வரி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று சட்டசபையில் விவாதம் நடத்தது. இந்த விவாதத்தை துவக்கி வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பேசினார்.அப்போது அவர் ஆந்திர அரசை கடுமையாக கிண்டலடித்தும் தாக்கியும் பேசினார். இந்த அரசு பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய நகைச்சுவை அரசாக வர்ணிக்கப்படுகிறது என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.அனைத்து அம்சங்களிலும் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்விகளை கண்டுள்ளது என்று நாயுடு கடுமையாக சாடினார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முதல் அமைச்சருக்கு எதிராக மட்டும் கொண்டு வரப்படவில்லை. அனைத்து அமைச்சர்களுக்கு எதிராகவும்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் நாயுடு கூறினார். ஆட்சியை நடத்துவதற்கு எங்களது நம்பிக்கையை இந்த அரசு இழந்து விட்டது என்று நாயுடு குறிப்பிட்டார்.
அப்போது ஆவேசமாக எழுந்த முதல்வர் கிரண் குமார் ரெட்டி நாயுடுவின் நம்பிக்கை எங்ளுக்கு தேவையில்லை. மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் என்றார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்பேசிய நாயுடு ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை குறிப்பிட்டு சில குற்றச்சாட்டுகளை கூறினார். உங்களது ஆட்சியின் லட்சணங்களை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று நாயுடு கூறினார். நீங்கள் ( ரெட்டி ) நியமனம் செய்யப்பட்ட முதல்வர். சோனியாவின் கால்களில் விழுந்து நீங்கள் இந்த பதவியை பெற்று இருக்கிறீர்கள். சீலிடப்பட்ட உறையில் இருக்கும் முதல்வர் நீங்கள் என்று நாயுடு குற்றம்சாட்டினார்.
அப்போது ஆவேசம் அடைந்த கிரண் குமார் ரெட்டி, எனது குடும்பம் 1962 ம் ஆண்டு முதற்கொண்டே காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறது. எனக்கு சோனியாவின் கருணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அப்படி அல்ல. 1995 ம் ஆண்டு உங்களது சொந்த மாமனாரையே நீங்கள் முதுகில் குத்தி விட்டு முதல்வர் ஆனவர் என்று காட்டமாக சாடினார்.
இதற்கு பதிலடி கொடுத்த நாயுடு நான் எனது கட்சிக்கு தலைவர். ஆனால் நீங்கள் சோனியாவின் கருணையால் உருவான தலைவர் என்றார்.
போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நீங்கள் பொது மக்களிடம் போக முடியாது. உங்களது அரசு ஒரு பெரிய ஜோக் அரசு என்று மக்களால் பேசப்படுகிறது என்று நாயுடு கூறினார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உங்கள் மீது வழக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நீங்கள் ஊழலை பற்றி பேச உரிமையில்லை என்று ரெட்டி வாதிட்டார்.
கடந்த 2004 ம் ஆண்டு முதல் இந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல் விவகாரங்களை நாயுடு பட்டியலிட்டு பேசினார்.
ஆந்திர உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மீதும் சில குற்றச்சாட்டுக்களை நாயுடு கூறினார்.
அதற்கு பதில் அளித்த சபீதா இந்திரா என் மீதும் என் குடும்பத்தார் மீதும் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை நீங்கள் அரசிடம் கொடுங்கள் . அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்படும். இப்போது குற்றச்சாட்டு உங்கள் மீதான் இருக்கிறது அதற்கு நீங்கள் பதில் கொடுங்கள் உண்மையை நிரூபியுங்கள் அதை விட்டு அபாண்டமாக குற்றம் சுமத்தாதீர்கள் என்று சபீதா இந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாயுடுவுக்கும் சபீதா இந்திராவுக்கும் இடையே நடந்த இந்த வார்த்தை போருக்கு பிறகு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் , சந்திரபாபு நாயுடு மீது பாய்ந்தனர்.
தங்களது கட்சியை பற்றி பொய்க்குற்றச்சாட்டு கூறிய நாயுடுவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சபையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.