எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச.- 8 - சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதற்கு எதிர்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது. ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இந்த திட்டத்தை கிடப்பில் போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தால் உள்நாட்டு சில்லறை வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் பல கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று பாரதீய ஜனதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் லோக் சபை, ராஜ்ய சபை ஆகிய இரு சபைகளுமே எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் முடங்கின. இந்த கட்சிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மேலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மிகவும் ஆடிப்போன மத்திய அரசு இந்த முடிவை நிறுத்தி வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்றம் நேற்று வழக்கம்போல் கூடியது. டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்றத்தின் லோக் சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படும் வரையில் அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசிக்கும் வரையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு கிடப்பில் போடுவதாக அவர் தெரிவித்தார்.
இதே போல ராஜ்ய சபையிலும் இதேபோன்ற ஒரு அறிக்கையை மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா வெளியிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஈடுபாடு இல்லாமல் இந்த முடிவை செயல்படுத்த முடியாது என்பதால் அவர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகு ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதுவரை இந்த முடிவை அரசு நிறுத்தி வைப்பதாகவும் பிரணாப் முகர்ஜி விளக்கினார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்துள்ளதாக பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புக்கு லோக் சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் வரவேற்று பேசினார்.
மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு தலைவணங்கி விட்டது. மக்களின் மன உறுதிக்கு முன்பாக அரசு தலை வணங்குவது தோல்வியாகாது என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.
மத்திய நிதி அமைச்சரும் லோக் சபையின் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக்கு பிறகு சபாநாயகர் மீராகுமார், பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த விஷயம் தொடர்பாக கொடுத்திருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களையும் நிராகரித்தார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கோரி பா.ஜ.க. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டு வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும் கூட பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பால் திருப்தி அடையாத பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் லோக் சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு லோக் சபையில் வழக்கமான கேள்வி நேரம் தொடங்கியது. கடந்த மாதம் 22-ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதற்கொண்டே இரு சபைகளிலும் எந்த விதமான அலுவல்களும் நடக்கவில்லை. அதன் பிறகு இப்போதுதான் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் முதன் முறையாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் சபை நடவடிக்கைகள் வழக்கம் போல் சுமூகமாக நடந்தன.
எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்து சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை கிடப்பில் போட அரசு முன் வந்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்
17 Apr 2024சென்னை : தமிழ்நாட்டில் நாளை (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணி வரை முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 Apr 2024புதுடெல்லி : இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு
17 Apr 2024பெங்களூரு : நாட்டின் ஜனநாயகத்தை காக்க மோடியை வீழ்த்த வேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.