முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா தீ விபத்து பலியானவர்களுக்கு பார்லி.யில் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.- 10 - கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. கொலகத்தாவின் தெற்குபகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை சரியாக 3.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்ததில் மூச்சுத்திணறி 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பலியானார்கள் மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை நேற்று பாராளுமன்ற லோக்சபையில் சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய  மெளன அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் தீ விபத்துக்குள்ளான ஏ.எம்.ஆர.ஐ.மருத்துவமனைக்கு செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவின்பேரில் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்