முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 7 தொழிலாளர்களை கடத்தி சென்ற மாவோயிஸ்ட்கள்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜமுய்,டிச.- 10 - பீகார் மாநிலத்தில் தொழிலாளர்கள் 7 பேர்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடத்திச்சென்றுவிட்டனர்.  பீகார் மாநிலத்தில் ஜமுய் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பகரி என்ற கிராமத்திற்குள் சுமார் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 50 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நேற்றுக்காலையில் நுழைந்தனர். அங்கு பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டியிருந்த தொழிலாளர்கள் 4 பேர்களை பிடித்து கடத்திச்சென்றுவிட்டனர். பின்னர் மற்றொரு கிராமத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டியிருந்த தொழிலாளர்களில் 3 பேர்களை கடத்திச்சென்றுவிட்டனர். தொழிலாளர்களிடம் பணம் கொடுக்கும்படி கோரியதாகவும் அதற்கு அவர்கள் மறுத்ததால் மாவோயிஸ்ட்கள் அவர்கள் 7 பேர்களையும் கடத்தி சென்று வனப்பகுதிக்குள் கொண்டுசென்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட அந்த 7 பேர்களையும் தேடும்பணியில் அதிரடிப்படையினர், மத்திய ரிசர்வ் படையினர் போலீசார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்