முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்க 3-வது முறையாக டெல்லியில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 12 - ஊழலை ஒழிக்க பலமான ஜன்லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரக்கோரியும் பாராளுமன்ற குழுவின் உப்புசப்பற்ற லோக்பால் மசோதா நகலை எதிர்த்தும் அண்ணா ஹசாரா நேற்று டெல்லியில் 3-வது முறையாக ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி பிரபல காந்தீயவாதியான அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார். அதனையொட்டி ஊழலை ஒழிக்க பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா கொண்டு வர மத்திய அரசு உறுதி அளித்தது. அதனையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். பின்னர் பலமான ஜன்லோக்பால் மசோதாவை கொண்டுவரக்கோரி இரண்டாவது முறையாக அண்ணாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. பயந்துபோன மத்திய அரசு அதற்கும் சம்மத்தித்து பாராளுமன்ற குழுவை நியமித்து பலமான லோக்பால் மசோதாவுக்கான வரைவை உருவாக்கி உள்ளது. இதுவும் பலவீனமாக உள்ளது என்று கோரியும் பலமான மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நடப்புக்கூட்டத்திலேயே நிறைவேற்ற வலியுறுத்தியும் அண்ணா ஹசாரே நேற்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு நாள் உண்ணாவிரதம் 3-வது முறையாக இருந்தார். நேற்று சரியாக காலை 10.15 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரை சுற்றிலும் ஏராளமானோர் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் தேசிய கொடியை அசைத்து பிடித்து காட்டியவாறு விண்ணை பிளக்கும் வகையில் வந்தே மாதரம், பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷம் போட்டனர். அண்ணா ஹசாரேவும் பாரத் மாதவுக்கு ஜே, வந்தே மாதரம் என்று கோஷம் போட்டார். உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று காலையிலேயே ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்துவிட்டனர். அண்ணா ஹசாரே வெள்ளை நிறத்தில் குர்தா, மகாத்மா காந்தி தொப்பி அணிந்து ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஹசாரேவுடன் அவரது குழுவினர் அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோதியா, சஞ்சய் சிங், குமார் விஸ்வாஷ் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.  உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்பு ராஜ்காட் சென்று காந்தி சமாதியில் ஹசாரே அஞ்சலி செலுத்தினார். அங்கு சுமார் அரைமணி நேரம் தியானம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் முதலில் பல நூறுபேர் மட்டுமே கலந்துகொண்டர். பின்னர் நேரம் போகப்போக ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். உண்ணாவிரதத்தை நேற்றுமாலையில் ஹசாரே முடித்துக்கொண்டார். பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் உண்ணாவிரதம் இருந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஹசாரே ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஹசாரேயின் சொந்த ஊரிலும் ஹசாரேவுக்கு ஆதரவாக பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago