முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட 7 தொழிலாளர்கள் பீகாரில் விடுதலை

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, டிச.13 - மாவோயிஸ்டு தீவிரவாதிகளால்  கடத்திச் செல்லப்பட்ட 7 தொழிலாளர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். பீகார் மாநிலம் ஜாமூய் மாவட்டத்தில் தனியார் கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்து வந்த 7 தொழிலாளர்களை துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மாவோயிஸ்டு கொரில்லா தீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதி கடத்திச் சென்றனர். தாங்கள் கேட்ட பணத்தை கொடுக்க மறுத்ததால் இந்த தொழிலாளர்களை மாவோயிஸ்டுகள் கடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இவர்கள் 7 பேரையும் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விடுதலையான 7 தொழிலாளர்களுக்கும் மருத்துவ  பரிசோதனை செய்யப்பட்டு  அதன் பிறகு அவர்கள்  சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்