முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆற்றில் பயணிகள் பஸ் விழுந்து உத்தரகாண்டில் 12 பேர் பலி

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ருத்ராபூர், டிச.- 19 - உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் பஸ் விழுந்து 6 பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.மேலும் 20 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் நடந்த திருவிழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு சிலர் ஒரு பயணிகள் பஸ்சில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ருத்ராபூர் மாவட்டம்   காதர்பூர் என்ற இடத்தில் பஸ் வந்துகொண்டிருந்த போது கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் அந்த பஸ் வழிதவறி  சாலையை விட்டு அகன்று  அருகில் ஓடிக்கொண்டிருந்த நாதல் நதியில் விழுந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி 6 பெண்கள் உள்பட  12 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 20 பேர்  படுகாயங்களுடன் மீட்கப்பட்டு  ருத்ராபூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  மேலும் 2 பேர் ஆபத்தான  நிலையில் நைனிடால் மாவட்ட மருத்துவமனைக்கு  எடுத்துச்செல்லப்பட்டனர். பனி மூட்டம்  காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர். பலியானவர்கள் எந்த ஊர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்