முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் பண இரட்டிப்பு மோசடி செய்த 7 பேர் கைது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், டிச. - 22 - தென் மாவட்டங்களில் பண இரட்டிப்பு மோசடி செய்த கும்பலை சேர்ந்த 7 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், ரூ. 61,000 ரொக்கம் மற்றும் 6 செல்போன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பண இரட்டிப்பு மோசடி கும்பலிடம் பலர் ஏமாந்து பணத்தை இழந்து வந்துள்ளனர். இதனிடையே கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த கண்ணன், தவமணி ஆகியோர் தங்களை ஆசை வார்த்தை கூறி பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி போலீஸ் வேடத்தில் வந்து பணத்தை பறித்து சென்றனர் என்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருமங்கலம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பாக விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி, பால்பாண்டி, திருமங்கலம் சக்திவேல், வடகரை அழகர், மதுரை அண்ணாநகர் டிரைவர் பாண்டி, அவரது மனைவி சுதா மற்றும் திண்டுக்கல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆயுதப் படை போலீஸ் தாஸ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட திருமங்கலம் சுந்தரபாண்டி, அரசபட்டி ராஜேந்திரன், காளையார்கோவில் வேல்முருகன், சிவகாசி முருகன், அசோக்நகர் சக்தி உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்