முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.17 இயக்கத்தினர்-இயக்குனர்கள் மெரினா கடற்கரையில் பேரணி:

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 26 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து மே.17 இயக்கத்தினர் சார்பில் நேற்று மெரினா கடற்கரையில் கண்ட பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். வைகோவும் கலந்துகொண்டார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், மெத்தனமாக இருக்கும் மத்திய அரசை கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை மெரினா கடற்கரையில் மே.17 இயக்கத்தினர் கண்டன பேரணி பொதுக்கூட்டம் நடத்தினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மே.17 இயக்கத்தினரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சேரன், விக்ரமன், கவுதமன், கவிஞர் தாமரை மற்றும் ஏராளமான தமிழறிஞர்களும், கலந்து கொண்டனர். பின்னர் கலங்கரை விளக்கம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

ஊச்ச்சி சச்சிடீ

முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கேரள அரசினை கண்டித்து மே.17 இயக்கத்தினர், மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம். இதில் வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், சேரன், விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்