முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்துப் பட்டியலை அளிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, டிச. - 26 - அசையா சொத்துக்களின் பட்டியல் எவ்வளவு என்கிற தகவலை அரசுக்கு அளிக்கும்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் மூலமாக தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களாகவும், அரசின் பல்வேறு துறைகளில் செயலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அசையா சொத்துக்கள் எவ்வளவு வாங்கியுள்ளனர் என்கிற தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதிகாரிகள் தங்களது பெயரிலோ, அல்லது வாரிசுகள் அல்லது மனைவி பெயரிலோ சொத்துக்களை வாங்கியிருந்தால் அது குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு சொத்து ஏதும் வாங்கவில்லை. கடந்த ஆண்டு போலத்தான். மாற்றமில்லை என்பன போன்ற கருத்துக்களை தெரிவிக்க கூடாது. வாங்கிய சொத்துக்களின் விபரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் குமார் ஜயந்த் கடிதம் மூலமாக அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்