முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் 30ம் தேதி நடை திறப்பு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, நவ, 29  - சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து மகரவிளக்கு கால பூஜைக்காக மீண்டும் வரும் 30 ம் தேதி கோவிலின் நடை திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் 17 ம் தேதி தொடங்கிய மண்டல பூஜை கடந்த 27 ம் தேதியுடன் நிறைவடைந்தது. அன்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு தந்திரிகண்டரரு மகேஸ்வரரு தலைமையில் பிரம்மகலசம் பூஜித்து பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கனகாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலையில் தீபாராதனையுடன் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. 

மீண்டும் மகர விளக்கு கால பூஜைக்காக வரும் 30 ம் தேதி மாலை நடை திறக்கப்படும். மறுநாள் 31 ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். வரும் 4 ம் தேதி மகரசங்கரண பூஜையும், வரும் 15 ம் தேதி மகர விளக்கு பெருவிழாவும் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்