முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுவான லோக்பால் உருவாக ஆட்சி மாற்றம் தேவை

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.30 - மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றமே வலுவான லோக்பால் அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், அந்த கட்சிக்கு எதிராக 5 மாநில சட்ட பேரவை தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் ஹசாரே அறிவித்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை கெஜ்ரிவாலும், கிரண்பேடியும் தெரிவித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்படாமல் ஜனநாயக லோக்பாலை பெற முடியாது. அது எப்போது நடக்கும் என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கிரண்பேடி பதிவு செய்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் சோனியாவை தாக்கி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் கெஜ்ரிவால், கட்சி தலைமைக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதற்கு எம்.பிக்களுக்கு உரிமையில்லை. அவர்கள் என்ன கட்சி தலைமையின் ஒப்பந்த தொழிலாளர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்