முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாவட்டங்களை சேர்ந்த 8 அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.31 - ஈரோடு, கோவை மாநகர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடி ஒன்றியச்செயலாளர் க.அசோகன், மன்னார்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சீனிவாசன், மன்னார்குடி சிவா ராஜமாணிக்கம், சி.ஆர்.சி.ஆசைத்தம்பி, ஈரோடு மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபாளையம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் எஸ்.கே.மோகன், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவை தமிழ்மணி கோவை விஜயகுமார், பாரதிநகர், கோவை லியோ (எ) விமல் ஆதித்தன்

ஆகியோர் இன்று நேற்று (டிச.30) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்