முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடைபல்கலை ஆராய்ச்சி மைய தலைவருக்கு விருது-கவர்னர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜன. - 3 - திருப்பரங்குன்றத்தில் உள்ள, தமிழ்நாடு கால்நடை அறிவியில் மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் பண்ணை முருகானந்தத்திற்கு கவர்னர் ரோசய்யா விருது வழங்கினார். உலக கால்நடை மருத்துவ ஆண்டின் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த பேராசிரியருக்கான விருதை திருப்பரங்குன்றம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவரும் பேராசிரியருமான டாக்டர் பண்ணை முருகானந்தம் 30 ஆண்டுகள் சிறந்த பணியாற்றியமைக்கான விருதை தமிழக கவர்னர் ரோசய்யாவிடம் இருந்து பெற்றார். அவருக்கு கால்நடை பல்கலைக் கழக பேராசிரியர்கள், டாக்டர்கள், உமாராணி, பூவராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். 

 

பட விளக்கம்

சிறந்த பேராசிரியருக்கான விருதை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக் கழகம் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் பண்மை முருகானந்தத்திற்கு தமிழக கவர்னர் ரோசய்யா வழங்கினார். உடன் தமிழக அமைச்சர்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்