எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 9 - முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குவிக்குக்கு, லோயர் கேம்பில் உள்ள மின்சார வாரிய வளாகத்தில் 2,500 சதுர அடி பரப்பளவில், ரூ.1 கோடி செலவில், அவரது திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைகளை nullர்த்தி செய்வதில் தென் தமிழக மாவட்டங்களான தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைnullநீர், முல்லை ஆறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள மாநிலத்தில் ஓடி வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. மேலும், இம்மாவட்டங்களின் குடிநீnullர் தேவையும் இந்த அணை மூலம் பெருமளவு நிறைவு செய்யப்படுகிறது. இந்த முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கியவர் கர்னல் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் ஆவார். இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர். நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார். இதன் தொடர்ச்சியாக, கர்னல் பென்னிகுவிக் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீnullர் பெரியாறு என்ற ஆறாக மேற்குப் புறமாக ஓடி அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைப் பார்த்து இதனை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீnullரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் எனக் கருதி, பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார். இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீnullர்தேக்கம் உருவாக்கப்பட்டு, அவை கிழக்கு முகமாக திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார். அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். காடு, விஷப்nullச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தினால், கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுவிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். இந்த அணை அக்டோபர் 1895ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக்கால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன. அந்தக் காலத்திலேயே பென்னிகுவிக் இந்த அணையை சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லினால் புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டினார். புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட அணைகள் நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்வதால் இந்த அணை இன்றும் உறுதியுடன் இருக்கின்றது.
இந்த அணையை கட்டியதன் மூலம், இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும், என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலுக்கு இலக்கணமாக, நூற்றாண்டு கடந்தும் இன்றும் தமிழக மக்களின் நினைவில் பென்னிகுவிக் நிற்கின்றார். இந்த அணை இன்றளவும் நன்முறையில் இயங்கி வருவதாலும், மேலும் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதாலும், இந்த அணையை உருவாக்கிய பென்னிகுவிக் அவர்களுக்கு நமது நன்றியினை காட்டும் வகையில், அன்னாருக்கு ஓரு நினைவு மணிமண்டபம் நிறுவ வேண்டும் என தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் கோரியுள்ளனர். தென் தமிழகத்தின் வளத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே உரிய காலத்தில் முடிப்பதற்காக தனது சொந்த நிதியினையும் செலவு செய்த பென்னிகுவிக்கின் நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் அன்னாருக்கு லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில், ஒரு கோடி ரூபாய் செலவில், அவரது திருஉருவ சிலையுடன் கூடிய ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அதன் திறப்பு விழாவிற்கு பென்னிகுவிக்கின் பேரன் அழைக்கப்படுவார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இந்த மணிமண்டபம் அமையும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.