முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியினர் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

மைன்புரி, ஜன.10 - உத்தர பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சமாஜ்வாடி கட்சியினர் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கி 7 கட்டங்களாக 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மைன்புரி நகரில் 200 சமாஜ்வாடி கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இவர்களில் முன்னாள் எம்.எல்.சி. ஒருவர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாரின் முன் அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தியதாக இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யில் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் கமிஷன் கடுமையாக அமுல்படுத்தி வருகிறது.

தேர்தல் விதிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்