முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் 17-ம் தேதி மரியாதை

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஜன.11 - பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான 17 ம் தேதியன்று அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலையிட்டு மரியாதை செலுத்துகிறார்.  இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 95​ஆவது ஆண்டு பிறந்த நாளான 17.1.2012 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு,  அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,  எம்.ஜி.ஆரின் 95​ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டு இனிப்பு வழங்க உள்ளார்.  அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது முழு திருவுருவ வெண்கலச் சிலைகளை காணொலி மூலம் திறந்து வைத்து, ஏழ்மை நிலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்லூரி கட்டணங்களுக்காக நிதியுதவி வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்