முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநில காங். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு

புதன்கிழமை, 16 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி,மார்ச்.16 - கவுகாத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடித்துள்ளதையடுத்து அசாம் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு உல்பா தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் அலுவலகத்தில் இருந்த 5 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் மற்றொரு தீவிரவாத இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியதில் எல்லைப்பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியானார்கள், 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மேலும் அனுப்பப்பட்டுள்ளனர். வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுவருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா-பூட்டான் எல்லை அருகே எல்லை பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். தாக்குதல் நடந்த இடத்திற்கு எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ராமன் ஸ்ரீவஸ்தவா நேரில் சென்று தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலால் 8 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். என்ன நடவடிக்கை என்பதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்த பின்னர் அவர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்