முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதலில் 5 பேர் பலி

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

சாஹிப்கஞ்ச், ஜன.12 - டெல்லி சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயிலும் சரக்கு ரயில் ஒன்றும் மோதிக்கொண்டதில் 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் திப்ருஹர் என்ற இடத்திலிருந்து டெல்லி நோக்கி பிரம்மபுத்திரா மெயில் ரயில் சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 5.50 மணிக்கு இந்த ரயில் கரோன்புரோட்டோ என்ற இடத்தில் வந்தபோது அதே வழித்தடத்தில் ஒரு சரக்கு ரயில் பின்னோக்கி வந்தபடி இந்த பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் பயணிகள் ரயிலில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர் என்று ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறினார்.

ஆனால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது  பிரம்மபுத்திரா ரயில் மோதியதில் அந்த ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டு விழுந்தது என்றும்  இதில் 5 பேர் பலியானார்கள் என்றும் மாவட்ட போலீஸ் அதிகாரி பிரவீண் ஸ்ரீவத்சவா கூறினார்.

இந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.சம்பவம் நடந்த இடத்திற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்