முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 வயது சிறுமியை நரபலி கொடுத்தவர் கைது

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

மிர்ஸாபூர், ஜன.12 - 10 வயது சிறுமியை நரபலி கொடுத்த ஒரு நபரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலம் மிர்ஸாபூர் நகரில் உள்ள மட்டுவாகோக்ரி என்ற இடத்தைச்  சேர்ந்தவர் ராஜேஷ் விஸ்வகர்மா(30). இவரது மனைவிக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் இன்னொரு குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று ஒரு மந்திரவாதி கூறியுள்ளார். இதையடுத்து 10 வயது தலித் சிறுமியை ராஜேஷ் விஸ்வகர்மா கழுத்தை நெரித்து கொலை செய்து நரபலி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் விஸ்வகர்மாவை போலீசார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்