முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் 15-ம் தேதி மீண்டும் சுப்ரபாத சேவை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

நகரி,ஜன.13 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சுப்ராபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் மார்கழியையொட்டி கோவிலில் காலை திருப்பாவை பாடப்பட்டுவருகிறது. நாளை மார்கழி மாதம் முடிவடைகிறது. அன்று வரை திருப்பாவை பாடப்படும். மறுநாள் (15-ம்தேதி) தைமாதம் பிறப்பதையொட்டி திருப்பதி கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும். திருப்பதி கோவிலில் 16-ம் தேதி பார்வேட்டு உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள பார்வேட்டு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பின்னர் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. பார்வேட்டு உற்சவத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்