பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் உள்ள 'வர்த்தகப் பயிலுனர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.26 - சமுதாயத்தில் நலிவுற்ற நிலையில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பாதுகாக்கும் வகையில் கல்வி உதவிகள், வேலைவாய்ப்பு வசதிகள், பொருளாதார உதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் திறன் வளர்க்கும் பயிற்சிக்காக தமிழக அரசு சிறப்பு நிதி உதவி திட்டம் ஒன்றினை தாட்கோ மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் செயல்பாட்டிற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கனரக ஓட்டுநர் பயிற்சி சென்னை தரமணியிலுள்ள அரசு சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் வழங்கப்படும்.
மேலும் ஆரம்ப நிலை திறன் பயிற்சிகளான ஜேசிபி, பொக்கலின், போர்க் லிப்ட், ஆகியவற்றை இயக்குவதற்கான பயிற்சி, மின் பணியாளர், ஏ.சி.மெக்கானிக், டீசல் மெக்கானிக், பிட்டர், மோட்டார் மெக்கானிக் மற்றும் கணினி பயிற்சிகள் மாநில அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்கப்படும். இதே போல், அழகுக்கலை, தையல் கலை போன்ற பயிற்சிகள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும். இப்பயிற்சிகள் 2,350 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்களுக்கு 2 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
தேசிய நிறுவனங்கள் மூலம் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, காலணி மற்றும் தோல் தயாரிக்கும் பயிற்சி, திரைப்படத்துறை சார்ந்த பயிற்சி ஆகிய பயிற்சிகள் 1,500 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்களுக்கு 2 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.
மேலும், உணவு தயாரித்தல் மற்றும் உணவு பரிமாறல் போன்ற பயிற்சிகள், மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக்க தொழில் நுட்பவியல், துவாக்குடி என்ற நிறுவனத்திலும் மற்றும் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் அங்கீகாரம் பெற்ற தொழிற் பயிற்சிப் பள்ளிகள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி 1,500 நபர்களுக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
உதவி செவிலியர் மற்றும் மகப்பேறு உதவியாளர் பயிற்சி, கண் கண்ணாடியக சான்றிதழ் பயிற்சி மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பப் பயிற்சி அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் 400 நபர்களுக்கு 97 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
மேலும், ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்களுக்காக கணினி சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் 5,500 நபர்களுக்கு 6 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்படும். மேலும், பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் இறுதியாண்டு பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு என்ற பயிற்சி 4,000 நபர்களுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.
இதுவன்றி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட இளைஞர்கள் மென் திறன் பெறுவதற்கும், ஆங்கில பேச்சாற்றல் திறன் பெறுவதற்கும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கி பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கும், ஆதி திராவிட பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் 9, 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கும் வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சிப் பெறுதலுக்கான பயிற்சி, பட்டயக் கணக்கர்/செலவு கணக்கர் படிப்புகளில் பங்கு கொண்டு மாணவ மாணவியருக்கு பயிற்சி பெறுவதற்கான கட்டணங்கள் வழங்குதல், போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கு கொள்வதற்கான பயிற்சிகள், வங்கி பணிக்கான தேர்வுகள், காப்பீட்டு கழகங்களின் பணிக்கான தேர்வுகள் போன்ற தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான பயிற்சிகள் 5,910 நபர்களுக்கு 2 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும். மேலும், தொலை தொடர்புத்துறையில் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் தொலை தொடர்பு சார்ந்த பயிற்சிகள் 50 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும். 5 ஆம் வகுப்பு முடித்து 6 ஆம் வகுப்பு செல்லும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்களை ஒரு தனித்தேர்வு நடத்தி வட்டாரத்திற்கு ஒரு மாணவர் வீதம் தேர்ந்தெடுத்து, மொத்தமுள்ள 385 வட்டாரங்களில் 385 மாணவ,மாணவியரை நற்பெயர் பெற்ற சிறந்த உண்டு உறைவிடப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேர்த்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் திட்டத்தின் கீழ் 1,540 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்படுவர். இத்திட்டம் 5 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். அதிக அளவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட மக்களுக்கு, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி மற்றும் தச்சுக் கருவிகள் ஆகிய தொழிற் கருவிகளை வழங்குவதற்காக தற்போதுள்ள கிராமப்புற மக்களுக்கான வருமான வரம்பினை 16,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாக உயர்த்தியும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கான வருமான வரம்பு 24,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாயாக உயர்த்தியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மைய அரசின் கல்வி உதவித் தொகை பெற இயலாத, கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு 10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் விடுதியில் தங்காது படிக்கும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பராமரிப்புபடி, தொழில் நுட்பப் படிப்பு படிப்பவர்களுக்கு 125 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தியும், முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு 125 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்தியும், பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு 65 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தியும், பட்டயப் படிப்பு படிப்பவர்களுக்கு 125 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்தியும், 1, 2 மற்றும் சான்றிதழ் படிப்பு படிப்பவர்களுக்கு 65 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தியும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 42,444 கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவ, மாணவியர் பயன் அடைவார்கள். இதேபோன்று விடுதியில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கு மாதாந்தோறும் வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு படி, தொழில் நுட்பப் படிப்பு படிப்போருக்கு 280 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தியும், முதுகலைப் பட்டம் படிப்போருக்கு 175 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக உயர்த்தியும், பட்டப்படிப்பு படிப்போருக்கு 115 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தியும், பட்டயப்படிப்பு படிப்போருக்கு 175 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக உயர்த்தியும், 1, 2 மற்றும் சான்றிதழ் படிப்பு படிப்போருக்கு 115 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக உயர்த்தியும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 28,296 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இந்த உதவித்தொகை அதிகரிப்பின் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதல் செலவினம் 3 கோடியே 53 லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் ஏற்படும்.
மேற்கூறிய அரசின் நடவடிக்கைகள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படும். படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிப்பினால் மாணவ, மாணவியர் இடைனிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில இயலும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
18 Aug 2022சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை
18 Aug 2022மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
-
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு 20 சதவீதம் உயர்வு உலக சுகாதார நிறுவனம் தகவல்
18 Aug 2022ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்து, லண்டன் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ரெயில் சேவை கடும் பாதிப்பு
18 Aug 2022லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே..!
18 Aug 2022கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.நா.வுக்கு வங்கதேச பிரதமர் வலியுறுத்தல்
18 Aug 2022டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
-
இஸ்லாமியர்கள் அவமதிப்பால் சல்மான் ருஷ்டியை குத்தினேன் கைதான குற்றவாளி விளக்கம்
18 Aug 2022வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீக்கு 26 பேர் பலி 350 குடும்பங்கள் வெளியேற்றம்
18 Aug 2022அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
-
77வது நினைவுநாள் அனுஷ்டிப்பு: நேதாஜியின் அஸ்திக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த மகள் கோரிக்கை
18 Aug 2022புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாக நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
18 Aug 2022சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.