முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற நடிகர் கார்த்திக்கு பணம்...!

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

ராமநாதபுரம் மார் 18 - அ.இ.அ.தி.மு.க  கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு தி.மு.க சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் இருந்து நடிகர் கார்த்திக் ரூ, 10 கோடி பெற்றதாகவும், அதனாலயே அவர் அக்கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் தேவர் இளைஞர் பேரவை கூறியுள்ளது.

தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கணேசன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் தி.மு.க தலைவர் கருணாநிதி 

தேவர் சமுதாயத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவின் போது மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் வைக்க முயஹ்சி எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் செய்து தரவில்லை. மேலும் தேவர் 

சமுதாய மக்களின் ஓற்றுமையை குலைப்பதே அவருக்கு குறிக்கோளாக உள்ளது. தி.மு.க வின் வஞ்சக வலையில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் விழுந்து விட்டார். 

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடன் ரூ. 10 கோடி பணம் பெற்றுக் கொண்டு கார்த்திக் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். இது தேவர் சமுதாய மக்களுக்கு கார்த்திக் செய்துள்ள மிகப்பெரிய துரோகம் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நடிகர் கார்த்திக் வந்தால் அவரை உள்ளே விடாமல் விரட்டியடிப்போம். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்