முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டி பிரமுகர் மறைவுக்கு இரங்கல்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.26 - உசிலம்பட்டி பிரமுகர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறிஇருப்பதாவது: மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி ஒன்றியம், நக்கலப்பட்டி ஊராட்சி, மாதரை கிளைக் கழக மேலமைப்பு பிரதிநிதி எம்.நாகேந்திரன் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச் சகோதரர் நாகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்