எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.27 - எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக வி.ஐ.டி. நாட்டிலேயே முதன்முறையாக ஒரு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு அங்கமாக உயர்கல்வி செல்ல முடியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்கு முன்னாள் மாணவர்கள் உதவவேண்டும் என ஜி.விசுவநாதன் பேசினார். வி.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் இதன் 17வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து ஏறக்குறைய 2,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவுக்கு தலைமை தாங்கிய வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், சிறந்த சமூக பணிக்கான விருதை பாலாஜி நந்தகுமாருக்கும்(அரியூர் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர்), கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளில் சாதனை படைத்ததற்காக பி.ரோஸ் கவிதாவுக்கும், தொழில்முனைவோர்களை உருவாக்கும் பணியில் சாதனை படைத்ததற்காக ஜெரோம் ஜோசப் ராஜிக்கும், நிறுவனங்களை கையாளுவதில் சாதனை படைத்ததற்காக எம்.பி.சிட்டிபாபுவுக்கும் விருதுகளை வழங்கி தலைமையுரையாற்றியபோது கூறியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. உலக நாடுகள் பலவற்றை காணும்போது, நமது நாடு கல்வி வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது. 600 பல்கலைக்கழகங்களும், 13,000 கல்லூரிகளும் மட்டுமே உள்ளன. இதில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே உள்ளது. நம் நாட்டின் ஜனத் தொகைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் ஏற்பட வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அமர்த்துகின்றனர். அதனை பெறுவதற்கு நமது மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்கவேண்டும். இதற்கு உயர்கல்வி படித்தவர்கள் வாரம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு கல்லூரிக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். வி.ஐ.டி. மாணவர்கள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் புதிய பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்டு அனைத்தும் உலக மயமாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ளவர்கள் அயல் நாடுகளுக்கும், அயல் நாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கும் உயர்கல்வி கற்க வசதி ஏற்பட்டுள்ளது.
சீர்திருத்தம் என்ற பெயரில் கல்விக்கு கட்டுப்பாடு கூடாது என என் தலைமையிலான இந்திய கல்வி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் அரசுக்கு யோசனை கூறப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஒரு சில பல்கலைக்கழகங்கள் தான் அப்படி செயல்படுகின்றன.
எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் உயர்கல்வி என்ற ஒரு திட்டத்தினை நாட்டில் முதன்முதலாக வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. உயர்கல்வி செல்ல முடியாதவர்களை கண்டு அவர்களுக்கு தேவையான நிதி வசதி உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும். இதற்கு வி.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.விசுவதான் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை பன்னாரி அம்மன் குரூப் நிறுவனங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சங்க எதிர்கால பணிகளுக்கான திட்டங்களை துவங்கிவைத்து பேசியதாவது:
இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் பணிகளை திறமையாக மேற்கொண்டு , புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
வி.ஐ.டி.யில் பயின்று உலக அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வி.ஐ.டி.யில் சந்தித்து வசதி இல்லாத மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுண்ஐயாக இருப்பது வரவேற்கத்தக்கது.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படித்உத செல்பவர்கள் அந்தந்த பகுதிகளில் என்ன தொழில் தொடங்க முடியுமோ அதனை ஆராய்ந்து அன்த தொழிலில் ஈடுபடவேண்உடம். அதன் மூலம் தொழில் வளர்ச்சி பெருகி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு அளிப்பவர்களாக நீங்கள் மாறுவீர்கள்.
இவ்வாறு எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பேசினார்.
மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகைகளை வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.சம்பத் வழங்கினார்.
இவ்விழாவில் முன்னாள் எம்.பி. இரா.செழியன், காக்னிசன்ட் நிறுவன பிரதிநிதி ராகுல்சிங், வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், விட்டா நிர்வாகிகள் டி.வெங்கடேஷ், ஜி.பாலாஜி, அஸ்லாம் ஷெரீப், எஸ்.அஜய், பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் துவக்கத்தில் விட்டா பொது செயலாளர் சுதா ராஜகோபாலன் வரவேற்றார். முடிவில் விட்டா பெங்களூரு கிளை தலைவர் சங்கர் கோகுலே நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.