எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (27.1.2012) தலைமைச் செயலகத்தில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்டலூர் மேம்பாலத்தையும், தமிழகம் முழுவதும் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் இரயில் நிலையம் அருகில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள இரயில்வே கடவுக்கு மாற்றாக 27 கோடி ரூபாய் செலவில் 1480 மீட்டர்ளம் கொண்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழக அரசு 22 கோடி ரூபாயும், இரயில்வே துறை 5 கோடி ரூபாயும் செலவிட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இம்மேம்பாலத்தால் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் செல்லும் பொது மக்கள் பெரிதும் பயனடைவர். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை மேம்பாடு முக்கிய பங்கு வகிப்பதாலும், பொது மக்கள் மற்றும் பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தங்குத் தடையின்றி விரைவாக குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய சாலைகள் இன்றியமையாதவை என்பதால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாலை மேம்பாட்டில் பல முன்னோடி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் போக்குவரத்து மேம்பாட்டிற்காக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி கலைக் கல்லூரி சாலையில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம்; திருவாரூர் மாவட்டம், திட்டை தாராசுரம் சாலையில் சுள்ளான் ஆற்றில் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சேலம் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் அனுமன்தீர்த்தத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; திருவண்ணாமலை மாவட்டம், காழியூர் அருகில் செய்யாற்றின் குறுக்கே 10 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம்; திண்டுக்கல் மாவட்டம், கண்ணாப்பட்டி, செக்காபட்டி அருகில் வைகை ஆற்றின் குறுக்கே 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; திருப்ர மாவட்டத்தில், ஆத்துக்கால்புதூர் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; சாம்பல்மேடு அருகில் திருமூர்த்தி அணையின் கழிவாற்றின் குறுக்கே 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரியபட்டி சடையம்பாளையம் சாலையில் அப்பிலியபட்டி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கோயம்புத்தூர் மாவட்டத்தில், செந்தேவி பாளையம் அருகில் கரிசல்காட்டு பள்ளம் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பில் பாலம்; மாதம்பட்டி அருகில் குனியமுத்தூர் வாய்க்கால் குறுக்கே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; தொண்டாமுத்தூர் அருகில் சித்திரைச்சாவடி வாய்க்கால் குறுக்கே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிகோட்டை அஞ்செட்டி நாட்றாம்பாளையம் சாலையில் ஓடையின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; மதுரை மாவட்டத்தில், வீரபாண்டி அருகில் பொதுப்பணித்துறை அணையிலிருந்து வரும் உபரிர் வாய்க்கால் குறுக்கே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரம்பலூர் மாவட்டத்தில், துங்கபுரம் அருகில் வீரமுத்திரவாரி ஆற்றின் குறுக்கே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கொளத்தூர் அருகில் காட்டாற்றின் குறுக்கே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம், என மொத்தம் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், சாலை தன்மை தகவல் சேகரிக்கும் உபகரணம் தமிழக அரசால் நெடுஞ்சாலைத் துறைக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த உபகரணமானது சாலையின்ளம் மற்றும் அகலம் ஆகியவற்றை அளக்கும் கருவி, சாலை வலைதளத்தை புவி அமைப்புடன் இணைப்பதற்கான கருவி, ஓடுதளத்திலுள்ள மேடு பள்ளங்கள் மற்றும் தேய்மானங்கள் மற்றும் சமதளத்தில் உள்ள வேறுபாடுகள், சாலையின் வெடிப்புத்தன்மை ஆகியவற்றை துரிதமாக சேகரிக்க ஒளிமியுடன் கூடிய கருவி, சாலை எல்லைக்குள் அறிவிப்பு பலகைகள், மரங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் போன்றவற்றை, மூன்று தொடர் ஒளிப்பதிவு கருவிகளைக் கொண்டு பதிவு செய்யும் வசதி கொண்டதாகும். இந்த உபகரணத்தின் மூலமாக சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் ஒருசேர சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த உபகரணம் சீருந்தில் பொருத்தப்பட்டு சாலைகளில் பயணிக்கும் போதே அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது. சேகரித்த தகவல்களின் அடிப்படையில் பழுதடைந்த சாலைகளை முன்னுரிமைப்படுத்தி, மதிப்பீடு தயாரித்து அவற்றை மேம்பாடு செய்ய இந்த உபகரணம் பேருதவியாக இருக்கும். இதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 20,000 கி.மீ. தூர சாலைகளின் தன்மை பற்றிய தகவல்களை சேகரித்து, விஞ்ஞான ர்வமாக துரிதமாக சாலைகளை வடிவமைத்து உடனுக்குடன் மேம்படுத்திட, இந்த உபகரணம் உதவுகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறைக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் பொருத்திய இரண்டு வாகனங்களை வழங்கினார். இந்த உபகரணங்களைக் கொண்டு முதற்கட்டமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் சேதமடைந்த சாலைகளை விரைந்து ஆய்வு செய்து, துரிதமாக செப்பனிட உத்தரவிட்டார்கள். இந்நிகழ்சியின் போது மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.