முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமி மனுதள்ளுபடி: காங். அரசின் ஊழல் இமேஜை மாற்றிவிடாது

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, பிப். - 5 - ப. சிதம்பரத்திற்கு எதிரான சுப்பிரமணிய சுவாமியின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த நிலையில் இது குறித்து பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் ஊழல் இமேஜை மாற்றி விடாது என்று இக்கட்சி தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த கோரிக்கை குறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.  இதையடுத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று இந்த விஷயத்தில் ஒரு முடிவெடுத்தது. ப. சிதம்பரத்துக்கு எதிரான சுப்பிரமணிய சுவாமியின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அப்போது தள்ளுபடி செய்தது. இதன் மூலம் மத்திய மந்திரி சிதம்பரத்திற்கு ஒரு பெரும் தலைவலி நீங்கி விட்டது என்றே சொல்லலாம். இதை அவரது ஆதரவாளர்கள் சிவகங்கையில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்களாம்.  இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மேலிட பிரதிநிதி ரவிசங்கர் பிரசாத், நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் ஊழல் இமேஜை ஒருபோதும் மாற்றி விடாது என்று தெரிவித்தார். மேலும் ஊழலுக்கு எதிரான தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் அவர் கூறினார். இந்த நாட்டு மக்கள் மத்தியில் இந்த பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவோம் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இது கீழ்கோர்ட் முடிவுதான். இதற்கு மேல் இரண்டு மேல் கோர்ட்டுகள் உள்ளன என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.  ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததற்கான அபரிமிதமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே தான் நாட்டு மக்கள் மத்தியில் இதை தொடர்ந்து எழுப்பப் போவதாகவும் அவர் கூறினார். மற்றபடி இது ஏமாற்றம் என்று நான் கருதவில்லை. இது கதையின் முடிவும் அல்ல என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago