முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது: அந்தோணி

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிப்.- 14 - தனது வயது விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பால் மனம் நொந்துபோய் இருக்கும் இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வார் என்று கருதப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் அந்தோணி, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ஜெனரல் வி.கே. சிங், ராஜினாமா செய்ய முன்வந்துள்ளாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அந்தோணி, வி.கே. சிங் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும் நடந்து முடிந்த துரதிர்ஷ்டவசமான சர்ச்சைக்கு முடிவு கட்டுமாறும் தனது சகாக்களை அமைச்சர் அந்தோணி கேட்டுக்கொண்டார். வயது தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது குறித்தும் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த அரசுக்கு தற்போதையை தளபதி மீது நம்பிக்கை உள்ளது. அதையும் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துவிட்டோம். எல்லாம் தெளிவாகிவிட்டது. ஆகவே அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் அந்தோணி திட்டவட்டமாக தெரிவித்தார். இதனிடையே தனது மனுவை வி.கே. சிங், வாபஸ் பெற்ற பிறகு அவர் எந்த நேரமும் பதவி விலகக்கூடும் என்று மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அவரது பதவிக்காலம் வரும் மே மாதம் 31 -ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக யார் வரப்போகிறார்கள் என்ற கேள்வ எழுந்துள்ளது. இந்த பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்