முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடுகளம் காரணமாக ரன்கள் குறைவாக எடுத்தோம்: டோனி

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக் 13 - இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி டெல்லியில் நடந்தது. போட்டிக்கு பின்னர் இந்திய கேப்டன் டோனி கூறுகையில்,

இந்த போட்டி எங்களது கண்களை திறந்து விட்டது. நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு கட்டத்தில் தோல்வியடைய இருந்தோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். டெல்லி விக்கெட்டில் துவக்கத்தை பயன்படுத்தி அதிக ரன்களாக மாற்ற வேண்டியது அவசியம். நாங்கள் 40வது ஓவரின் போது 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தோம் என்பது முக்கியமானது. ஆடுகளத்தின் தன்மை காரணமாக நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

கோஹ்லி எங்களது அணியில் முக்கியமான நபர். அவர் எடுத்த ரன்கள் நிச்சயம் அவருக்கு உதவும். சுரேஷ் ரெய்னா சிறப்பாக பேட்டிங் செய்தார். சாம்பியன்ஸ் லீக் டி 20ல் இருந்த பார்மை அவர் இந்த தொடரிலும் தொடர்ந்து வருகிறார். ஷம்மி சிறப்பாக பந்து வீசினார். ரிவர்ஸ் ஸ்விங் முறையிலும் பந்து வீசப்பட்டது. அவர் முக்கிய கட்டங்களில் விக்கெட் வீழ்த்தினார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்