முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா!

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், நவ.11 - இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா எளிதில் வென்று தொடரையும் கைப்பற்றியது. முதலில் விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவரில் 242 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஜெயவர்த்தனே சதம் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 118 ரன்னும், தில்சான் 53 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதம் 4 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 44.1 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஏற்கெனவே முதல் 2 ஆட்டத்திலும் இந்திய அணி இலங்கையை அபாரமாக வென்று இருந்தது. தொடக்க வீரர் தவான் 91 ரன்னும் வீராட் கோலி 53 ரன்னும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:

இந்திய அணியை 242 ரன்களுக்குள் கட்டுப் படுத்தியது மிகவும் முக்கியமானது. இதற்கு அபாரமான பந்துவீச்சே காரணம். பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். 243 ரன் இலக்கை இந்த ஆடுகளத்தில் எடுப்பதில் எந்த சிரமும் இல்லை.

அதிவேகத்தில் 6 ஆயிரம் ரன்களை எடுத்த விவிலியன் ரிச்சர்டஸ் சாதனையை முறியடித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ரன்னை எடுத்தால் 6 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை புரிய முடியும் என்று எனக்கு தெரிந்து இருந்தது. ஆனால் அதை செய்ய முடியுமா? என்பதில் உறுதி இல்லாமல் இருந்தேன். நானும் எனது அணி வீரர்களும் எங்களால் எது முடியுமோ அதை முயற்ச்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்