முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞர் மன்னிப்பு: கனிமொழிக்கு பிடிவாரண்ட் ரத்து

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.11 - 2ஜி வழக்கில், திமுக எம்.பி. கனிமொழிக்கு பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை ஒரு மணி நேரத்தில் ரத்து செய்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

2ஜி வழக்கில் பல முறை சம்மன் அனுப்பப்பட்டும், கனிமொழி நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, நேற்று (திங்கள்கிழமை) கனிமொழியை ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது செய்யுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி கூறுகையில், 2ஜி வழக்கில் நேற்று இறுதி வாதம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், கனிமொழியும் நீதிமன்றத்துக்கு வரவில்லை அவரது வழக்கறிஞரும் வரவில்லை. நேரம், 11.30 மணி ஆகிவிட்டது. கனிமொழி ஆஜராகததையடுத்து அவருக்கு இந்த நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கிறது என்றார்.

ஆனால், கனிமொழியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார். 12.25 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜரான கனிமொழியின் வழக்கறிஞர் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து கனிமொழிக்கு பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு 1 மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும், கனிமொழியின் வழக்கறிஞரை நீதிபதி சைனி கடுமையாக எச்சரித்தார். எதிர்காலத்தில் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

முன்னதாக நேற்று காலை, ஆவணங்களைப் படித்து பார்க்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதையடுத் 2 ஜி வழக்கின் இறுதி வாதத்தை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்