எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, நவ.14 - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் 150-வது ஆண்டு விழாவை ரோஹித் சர்மா தனது 3 உலக சாதனைகளினால் சிறப்புறச் செய்துள்ளார். இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது. 264 ரன்களை 173 பந்துகளில் குவித்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் எடுத்த வீரர், சர்வதேச ஒருநாள் போட்டியில்ல் முதல் முறையாக 250 ரன்களைக் கடந்த வீரர் என ரோஹித் சர்மா 3 உலக சாதனைகள் படைத்த இந்த இன்னிங்ஸில், இந்தியா 5-வது முறையாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்களுக்கும் மேல் குவித்தது.
தோனி தனது ட்விட்டர் பதிவில் ரோஹித்திற்கு இரட்டைச்சத சாதனைக்காக வாழ்த்து கூறியுள்ளார், அதில், "ரோஹித் இன்று ஆட்டமிழக்காமல் இருந்தால் நிச்சயம் 250 ரன்கள் எடுப்பார்" என்று கூறியிருந்தார். தோனியின் இந்த எதிர்பார்ப்பை ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார். அவர் 173 பந்துகளில் 33 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது 2-வது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோராகும். ரோஹித் அரை சதம் எடுக்க 72 பந்துகள் எடுத்துக் கொண்டார். முதல் 100 பந்துகளில் 100, பிறகு 150 ரன்களை 125 பந்துகளில் எட்டினார். 200 ரன்களை 151 பந்துகளில்ம் 250 ரன்களை 166 பந்துகளில் எட்டினார். கடைசி 50 ரன்கள் 15 பந்துகளில் எடுக்கப்பட்டது.
2 மாதகாலம் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் காயம் காரணமாக விலகியிருந்தார். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது சதம் கண்டார். ஆனாலும் அணித் தேர்வு அதற்கு முன்னரே செய்யப்பட்டு விட்டதால் அவரால் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை. ராபின் உத்தப்பாவுடன் 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 128 ரன்கள் 58 பந்துகளில் விளாசப்பட்டது. உத்தப்பா இதில் 16 ரன்களை மட்டுமே எடுத்து எதிர்முனையில் இருந்து ரோஹித் சர்மாவின் தாண்டவத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.
பவுண்டரிகளும் சிக்சர்களும் கண்களுக்கு பெரிய விருந்து என்று இர்பான் பத்தான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ரஹானே 28 ரன்களுக்கு நன்றாக ஆடினார். அவர் லெக் திசையில் திருப்பி அடிக்க நினைத்து மேத்யூஸ் பந்தில் எல்.பி. ஆனார். அம்பாத்தி ராயுடு 8 ரன்களில் எரங்காவின் அபார பந்தில் பவுல்டு ஆனார்.
13-வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் என்று இலங்கை கட்டுப்பாட்டில்தான் இந்தியா இருந்தது. அதன் பிறகு கோலியும், ரோஹித்தும் இணைந்து இன்னிங்சை நிலைப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 202 ரன்களை 25 ஓவர்களில் சேர்த்தனர். கோலி 6 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சற்றே தயங்கி 2-வது ரன்னை ஓடி ரன் அவுட் ஆனார். 39-வது ஓவரில் இந்தியா 261/3 என்று இருந்தது. அப்போது ரோஹித் சர்மா 152 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு 11 ஓவர்களில் 143 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா மட்டும் 112 ரன்களை விளாசியுள்ளார்.
இந்த இன்னிங்ஸை நன்றாக திட்டமிட்டு ஆடினார் ரோஹித் சர்மா. இலங்கை பந்து வீச்சாளர் குலசேகரா, 9 ஓவர்களில் 89 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மீண்டும் அழைக்கப்பட்ட புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் 7 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்தார். மொத்தம் 300 பந்துகளில் 173 பந்துகளை ரோஹித் சர்மா சந்தித்தார். இந்திய அணியின் மொத்த ரன்களில் பாதிக்கும் மேல் ரோகித் மட்டையிலிருந்து வந்ததுதான்.
அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் இரட்டை சதம் எடுக்கும் போது ரோஹித் சர்மா 16 சிக்சர்களை அடித்து உலக சாதனை நிகழ்த்தினார் என்றால் இன்றைய அதிரடி இரட்டைச் சத உலக சாதனையில் 33 பவுண்டரிகளை அடித்து பவுண்டரி சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது சாதனை இரட்டைச் சதத்தில் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்களை அடித்திருந்தார். சேவாக் 219 ரன்களை எடுத்த போது, 25 பவுண்டரி 7 சிக்சர்களை எடுத்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா 33 பவுண்டரிகளை தனது இரட்டைச் சதத்தில் அடித்து சாதனையை தன்வசமாக்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.