முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக் உலக சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, நவ.14 - கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்து சேவாக் எடுத்த அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ரன்கள் சாதனையைக் கடந்தார் ரோஹித்.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, மீண்டும் இரட்டைச்சதம் விளாசினார். முதல் 100 பந்துகளில் சரியாக 100 ரன்களை எடுத்த ரோஹித், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து 150 ரன்கள் எடுத்தார். பிறகு 151 பந்துகளில் 200 ரன்களை கடந்தார் ரோஹித். குலசேகரா பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபார பவுண்டரி அடித்து அவர் இரட்டைச் சதம் கண்டார். இரண்டாவது 100 ரன்களை அவர் 51 பந்துகளில் எடுத்தார். இதில் அவர் 25 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடித்தார். ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த போது கோலி ரன் அவுட் ஆனார். இந்த முறையும் கோலி ரன் அவுட் ஆக, ரோஹித் சர்மா இரட்டைச் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியிலிருந்து 4 இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்