முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது நாளை விசாரணை

புதன்கிழமை, 10 ஜூலை 2024      இந்தியா
Senthil-Balaji 2023 03 27

புது டெல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது. 

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், தனக்கு ஜாமின் வழங்க கோரியும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு விசாரணைக்காக நேற்று  பட்டியலிடப்பட்டிருந்தது. 

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கின் விசாரணையை நாளைக்கு  ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அமலாக்கத்துறை தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நாளைக்கு  ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் கடைசி வழக்காக செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து