எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க. தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று, கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும் பெரும் சோகத்துக்கும் உள்ளாக்கியது. இறந்துபோனவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை நான் செலுத்துகிறேன். உறவுகளை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதியைக் கோரி இருந்தார். அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை.
செப். 25ம் தேதி காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தைப் பகுதியில் அனுமதி கோரிய மனுவுக்கும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை. பின்பு, செப். 29 அன்று அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர், வேலுசாமிபுரத்தில் 27ம் தேதி அன்று மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கோரினார். மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 515 காவலர்கள் கரூர் மாவட்டத்தில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவு காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் மொத்தம் 606 பேர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையைப் பொறுத்தவரை வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10,000 பேர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கூட்டம் நடத்த அனுமதி கோரிய கடிதத்தில் கூட்டம் நடத்த மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சியின் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால், கரூரில் மக்கள் காலை முதலே மக்கள் வரத் தொடங்கினார்.
செப். 27ம் தேதி அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் கடந்துதான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இங்கே, அனைத்து கட்சிகளைச் சார்ந்தவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை, உணவு ஏற்பாடும் ஏற்பாட்டாளர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியே செல்ல முடியவில்லை.
சம்பவம் நடந்த அதே வேலுசாமிபுரத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அதாவது செப். 25ம் தேதி எதிர்க்கட்சித் தலைவரின் பரப்புரை நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12,000 முதல் 15,000 வரை பங்கேற்றிருக்கிறார்கள். அந்த பரப்புரைக்கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்கள், 30 ஊர்க்காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அதற்கு நேர் மாறாக இந்த கட்சியினுடைய நிகழ்ச்சி நடந்துள்ளது. கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனத்தை பின் தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும் கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், அட்சயா மருத்துவமனை அருகே பிரச்சார வாகனத்தை நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறி சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணைச் செயலாளரை பல முறை தொடர்பு கொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும், அவர் த.வெ.க. தலைவர் தனது உரையை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். காவல்துறையின் வழிமுறைகளை மீறி வாகனம் அட்சயா மருத்துவமனையில் இருந்து 30-35 மீட்டர் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினர் இடையே இது நிலைகுலையச் செய்தது.
இதனால், கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் பீதி மற்றம் மூச்சுத்திணறல் மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டுள்ளனர். கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து தகரை கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால், மின்சாரம் தாக்குவதைத் தடுக்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும், மக்கள் உதவி கோருவதைக் கவனித்து காவல்துறையினர் மருத்துவமனை ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு, கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அவர்களைக் காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸூம் வரவில்லை.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, த.வெ.க.வினர் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால், மீட்புப் பணிகள் தடைபட்டன. இது தொடர்பாக கரூர் நகர காவல்நிலையத்தில் இரண்டு வழக்குள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித்துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார். மற்றொரு குற்றவாளி இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டுள்ளார். என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்னொரு முகத்தை காட்டி உள்ளார் நயினார்: சபாநாயகர் அப்பாவு தாக்கு
07 Dec 2025நெல்லை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்னொரு முகத்தை காட்டி உள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்: நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
07 Dec 2025வாஷிங்டன், நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
4 மணிநேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
07 Dec 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீரா
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் பெரியசாமி கருத்து
07 Dec 2025திண்டுக்கல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் 4-வது நாளாக அவதி
07 Dec 2025சென்னை, சென்னையில் ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் 4-வது நாளாக அவதிகுள்ளாகினர்.
-
டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்பு
07 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகள்: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி புதிய பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


